Friday 21 September 2018

போகர் வாக்கு:

போகர் வாக்கு:
*****************
உண்மையைத் தேடி அலைந்து ,
போகநாத பெருமானால் உயிர்வேதம் உபதேசம் அருளப்பட்டு,
உயிர்வேதம் விளக்கம் பெற்று,
உயிரை உணர்ந்து ,
உயிரை கவனத்தில் தியானித்து,
உயிரருள் ஒன்றே பொருளாகி இருப்பதை உணர்ந்து
உயிர்தான் கடவுள் என உணர செய்து,
உயிரை பலபடுத்தி உடலை நோய்களில் இருந்து மீட்டெடுத்து
உயிர் ஞானம், உயிர் தியானம், உயிர் கலை, உயிர் வித்தை கல்விகற்று
உயிர்வசம் நானாகி, அது என் வசமாகி ,
இரண்டும் ஒன்றாகி கலந்து உயிராகவே மாறி,
கோடா கோடி மனங்களுக்கும்அதிபதியாம் வாசிவாசி எனும் உயிர் இப்போ எம் அன்பின் வசமாகி!!!
உயிர்கலை உண்மையாக விளங்குபவரும்,
உண்மையை வார்த்தைகளால் சொல்லக் கூடியவரும்,
உண்மையாக நடப்பவரும்,
உயிர்கலை சொல்லிக் கொடுக்கக் கூடியவரும் ,
உயிரை விளங்கியவரும் ,
உயிரை விளக்குபவரும் ,
உயிராகவே வாழ்பவரும் ,
உயிர்வேதம் உண்மையை பின்பற்றுபவரும் ,
உயிரை பலபடுத்தி காட்டுபவரும் ,
உயிர்ஞான கல்வி தெளிவுபடுத்துபவரும் ,
குரு என்று அழைக்கப் படுவதற்கு தகுதி உடையவர்கள்.
இது போகர் வாக்கு... திருவடிகள் போற்றி!!!

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...