Friday 4 January 2019

சுவாசம்!

#சுவாசம்!
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை!
(இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

Thursday 3 January 2019

முருகனின் வயது என்ன?

முருகனின் வயது என்ன?
****************************
விஸ்வகர்மா இந்த பிரபஞ்சத்தை படைத்து, பல உயிர்களையும் சிருஷ்டித்தார். அவருடைய பஞ்சபிரம்ம புத்திரர்கள்தான் மனு, மயன், துவஷ்டா, சில்பி, விஸ்வஞர். இதில் யுக சுற்று என்பது மனு (பிரம்மனின்) கல்ப காலத்தைப் பொறுத்தே நிர்ணயமாகிறது.
பிரம்மனின் 1 நாள் என்பது 'கல்ப' காலமாகும், அது 14 மன்வந்திரம் (மனு+அந்தரம்) கொண்டது. இந்த ஒவ்வொரு மன்வந்திரதிற்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு மனுகாலத்திலும் பல சதுர் யுகங்கள் உண்டு. மத்ஸய புராணம்படி ஒரு மனு முடிய 71 சதுர்யுகங்கள் நடக்கவேண்டும். ஒவ்வொரு சதுர்யுக (அ) மகாயுகம் என்பது கிருத, த்ரேதா, துவாபர, கலி யுகங்கள் கொண்டது. ஆக, ஒரு சதுர்யுகம் (4320000 வருடங்கள்) என்பது :
கிருத யுகம்- 1728000 வருடங்கள், த்ரேதா யுகம் - 1296000, துவாபர யுகம் - 864000, கலியுகம் - 432000.
இப்போது 7வது (வைவஸ்வத) மன்வந்திரத்தில் 28வது சதுர்யுகம் நடக்கிறது. அதாவது பிரம்மனின் ஒரு நாளில் பகல் பொழுதுதான் முடிந்துள்ளது. ஒவ்வொரு மனு முடிவில் மீண்டும் பிரம்மா சிருஷ்டி பணியைத் தொடங்குவார். சிவனும் விஷ்ணுவும் அவரவர் பணிகளை செய்வார்கள். இது கூட்டுப்பணி.. பிரளயம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், நித்திய பிரளயம், யுகப் பிரளயம், அவாந்தர பிரளயம், மஹா பிரளயம் என்று பல வகையுண்டு.
இன்றைக்கு கலியுகம் பிறந்து 5018 ஆண்டுகள் ஓடியுள்ளது. இதற்குமுன் த்ரேதாயுகம் (கிருஷ்ணர் இருந்த காலம்) முடிந்துள்ளது. அதாவது, எட்டு லட்சம் சொச்ச ஆண்டுகள் முடிந்தது. அதற்குமுன் இராமர் அவதரித்தது இதே மன்வந்தரத்தின் 24வது மகாயுக ஒட்டத்தில் என்று புராணங்கள் சொல்கிறது. அப்படி என்றால் அதற்கு முந்தைய அவதாரங்கள் பற்றி சற்று பின்நோக்கிப் பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.
ஈசன் தன்னுடைய நெற்றிகண்ணின் மூலம் கந்தனை சிருஷ்டித்தார் என்பது நாம் அறிந்ததே. ஆக, ஈசனே கந்தனாக உள்ளாரே! மனுவின் முதல் காலமான 'சுயம்பு மன்வந்திரம்' போதே கந்தன் ஸ்ருஷ்டியாகி இருக்கலாம்(?) அந்த தொகைக் கணக்கை நம்மால் போடமுடியுமா?
போகர் ஏழாயிரம் நூலில், ஈசருடைய வட மொழி பற்றி அண்மைப் பதிவில் கண்டோம். அதன்பின் கார்த்திகேயனை படைத்து, பொதிகையில் தமிழ் படைத்து, முன்தோன்றிய மலைவாழ் மக்களும் அவனை கடவுளாக வணங்கியதையும் நாம் பார்த்தோம். இதன்படி, ஈசனின் மொழி வந்தபின், தமிழும் வந்தது. இது ஏறக்குறைய சமகாலமாகவும் இருக்கலாம். மனுபிரம்மன் கணக்கில் இது பெரிய இடைவெளி என்பது இல்லை. சம்ஸ்கிருதமும் தமிழும் அடுத்தடுத்து சிருஷ்டியானது என்று கொள்ளலாம். முன்தோன்றிய மூத்தகுடி பேசியது தமிழ்தான், வடமொழி இல்லை. பூமியில் மனிதன் பேசியது தமிழ்தான். பிற்பாடுதான் தேவமொழி மெல்ல மக்கள் மத்தியில் வந்தது. அது எப்போது என்பது அறியோம்!
இதனடிப்படையில் தமிழ்க் கடவுள் முருகன் தோன்றி எத்தனை காலம், தமிழ் எத்தனை தொன்மை, தமிழன் தோன்றி எத்தனை காலம், ஆகிறது என்பதை கணக்குபோட இயலாது.
போகர் தன்னுடைய ஜனன சாகரத்தில் ஆதியில் தானே நந்தி, பிரம்மன், திருமால், இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணர் என பல அவதாரங்கள் எடுத்தார். அப்படி இருக்க தான் முருகனாக இருந்த காலம் பற்றி போகருக்கே தெரியாதா என்ன? ஆனால் ஒரு சித்தராக ஜெனித்த போகர் மற்ற சித்தர்களைப்போல் சுப்பிரமணியனின் வயது தெரியவில்லை, எந்த நூலிலும் மூத்த சித்தர்கள் சொல்லவில்லை என்கிறார்.

சித்த போகர் செய்து ஓட்டிய மரக்கப்பல்

சித்த போகர் செய்து ஓட்டிய மரக்கப்பல்
******************************************
" பாற்கடலின் மத்திமத்தில் மகத்தான மரக்கப்பல் ஒன்று செய்தேன். ஆயிரம் பேர் பயணிக்க கூடிய அக் கப்பலை சீனபதி மக்கள் மிகவும் மெச்சினார்கள். அதன் நீளம் 800கஜம், அகலம் 100 கஜம். (1 கஜம் என்பது 3 அடி). நீள் சதுரமான அதை எப்படி பிசகில்லாமல் செய்து முடித்தேன் என்று சொல்கிறேன்.
வலுவான பலகைகள் எடுத்து வில்லாணி அடித்து நீளமான கட்டுமானம் செய்தேன். அதன் மத்தியில் பீடம் அமைத்து, அதை முழு உயரத்திற்கு கொண்டு சேர்த்தேன். கப்பலில் ஏழு தளங்கள் அமைத்தேன், ஒவ்வொன்றிலும் தொட்டிஎன்ற பீடம் வைத்து, உயரம் நூறு கஜம் உயரம் கொண்ட மண்டப தூண்கள் அமைத்தேன். கீழிருந்து முதல் மாடிக்கு செல்ல சாளரமும் கதவும் வைத்து வழி செய்து, எல்லா தளங்களையும் சேர்த்து மொத்தம் 64 வீடுகளை கட்டி கிழக்கு-மேற்காக 128 வாசலோடும், தெற்கு-வடக்கு முகமாய் உருதியாணி அடித்து கண்ணாடி சாளரங்கள் வைத்து, கப்பலின் சுவரோரம் கம்பிகள் வைத்து ஒரு பெரிய கோட்டையை பாங்குடன் அமைத்தேன்.
தளத்தின் ஒருபுறம் சுக்கான் அமைத்து, நால்புறமும் கதவு வைத்து, ஒவ்வொரு தளத்திலும் பரண் (deck) அமைத்து, வடம் வைத்து சங்கிலி கொண்டு சுக்கான் போட ஏதுவாக வழி செய்து, கப்பலின் மேலிருந்து கீழ்வரை இரும்பு குழாய் உருளை அமைத்து (pipes) வைத்தேன். தளத்தின் தலைபுரத்தில் அக்னிவைத்தேன், இடப்பக்கம் தண்ணீர் தொட்டி அமைத்து, (boiler) கொதிகலன் செய்து, (airtight) குழாய்கள் கசிவின்றி நீராவி கொண்டு செல்லும். கீழ்நிலையில் பொருத்திய சக்கரங்களை (turbine shaft) நீராவியின் உயர் அழுத்தம் கொண்டு திருப்ப, கப்பலும் நகரலாச்சு.
கடைசி முனையில் வசதியாய் நங்கூரம் மாட்டி, கப்பல் ஓடாமல் இருக்க அதை தட்டிப் போட்டேன். கீழ்நிலையில் கொதிபெரும் நீராவிக்கு வெப்பமூட்டும் அக்கினியின் புகை சூழாதிருக்க, வாட்டமுடன் எட்டங்கால் மேலே புகைபோக்கியும் (chimney) இரும்பினால் அமைத்தேன். நீராவியின் நிதானம் அறிந்து நேர்த்தியுடன் சூத்திரமுடன் ஓட்டினேன். வெகு ஜனகளையும், சித்தர் முனிகளையும் எற்றிபோனேன்.
மேல் அறையில் நானிருந்து சுக்கானை இடமும் வலமும் வளைத்து முடக்கிட்டேன். கடல் ஏழும் சுத்தி வந்து இமயகிரி பக்கத்தில் சீனபதி கடலோரம் கப்பலை வாகாக வந்து நிறுத்தினேன். என்மீது பட்சம் வைத்து என் நூதனமான வித்தைகளுக்கு அருள்புரிந்த திருமூலர்/ காலாங்கிநாதர் பாதங்களுக்கு என் அனந்தங்கள்".
இவ்வாறு போகர் தன சப்தகாண்டத்தில் சொல்லியுள்ளதை என்னால்முடிந்தவரை சுருக்கமாக இங்கே பதிவேற்றினேன். என் ஆய்வில் சீனாவில் இவர் வந்து நிறுத்திய இடம் மவுண்ட் கிங்யாங் பகுதி என அறிந்து கொண்டேன். அன்றே அவர் Underwater telescope பொருத்தியுமிருந்தார். பரங்கியர் தேசத்தில் (சீனராக) 12000 வருடங்கள் வாழ்ந்தேன் என்று சொல்லியுள்ள போகர், துவாபரயுக பிறபகுதியில் (அ) கலியுகத்தின் முற்பகுதியில் இந்த பிரம்மாண்டமான டைடானிக் போன்ற கப்பல் கட்டுமான சாதனையை செய்திருப்பார் என்று நினைக்கிறன்.

அகத்திய_பெருமானின்_பதினாறு_போற்றிகள்:

அகத்திய_பெருமானின்_பதினாறு_போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

ஆறுவகைச் சுவை

ஆறுவகைச் சுவை
********************
1⃣ *காரம்
************
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும்.
உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
வெங்காயம்,
மிளகாய்,
இஞ்சி,
பூண்டு,
மிளகு,
கடுகு
ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது.
2⃣ *கசப்பு
************
உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும்.சளியைக் கட்டுப்படுத்தும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
பாகற்காய்,
சுண்டக்காய்,
கத்தரிக்காய்,
வெந்தயம்,
பூண்டு,
எள்,
வேப்பம்பூ,
ஓமம்
போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.
3⃣ *இனிப்பு
**************
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
பழவகைகள்,
உருளை,
காரட்
போன்ற கிழங்கு வகைகள்.
அரிசி,
கோதுமை
போன்ற தானியங்கள்.
மற்றும்
கரும்பு
போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
4⃣ *புளிப்பு
*************
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
எலுமிச்சை,
புளிச்ச கீரை,
இட்லி,
தோசை,
அரிசி,
தக்காளி,
புளி,
மாங்காய்,
தயிர்,
மோர்,
நார்த்தங்காய்
போன்றவற்றில் அதிகம் உள்ளது.
5⃣ *துவர்ப்பு
***************
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது.
இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
வாழைக்காய்,
மாதுளை,
மாவடு,
மஞ்சள்,
அவரை,
அத்திக்காய்
போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
6⃣ *உப்பு
***********
ஞாபகசக்தியை கூட்டும்.
கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
கீரைத்தண்டு,
வாழைத்தண்டு,
முள்ளங்கி,
பூசணிக்காய்,
சுரைக்காய்,
பீர்க்கங்காய்
போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

*நம்பிக்கை* − *அவநம்பிக்கை*



*நம்பிக்கை* − *அவநம்பிக்கை*

மேலே உள்ள இரண்டுமே நம் மனதில் தான் உள்ளது

எதைக் கை கொள்வது என்பது நாம் தான் முடிவு செய்யவேண்டும்

இதை ஒரு கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஒருவர்(ஆண்,பெண்,அல்லது திருநங்கை)

கங்கையின் ஒரு கரையில் நின்று கொண்டு மறுகரைக்குச் செல்லவேண்டும் ,அவனுக்கு நீச்சல் தெரியாது.
கங்கையில் தண்ணீரின் வேகம் சற்று மிதமாகவே இருந்தது,ஆனால் அவனுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும்,என்ன
செய்வது என்று தெரியாமல் ,கடவுளை வேண்டினான்,அதிலும் அவனுக்குச் சந்தேகம்,
கடவுள் எங்கே நமக்கெல்லாம் உதவப்போகிறார் என்று,

ஆனால் கடவுளானவர் எப்பொழுதுமே நம்பிக்கை உள்ளவருக்கு உதவுவதும்,

அவநம்பிக்கை உள்ளவருக்கு (உதவாமல் இல்லை)அவர் எண்ணப்படியே விட்டுவிடுகிறார்

இவன் முதலில் சிறிது நம்பிக்கையோடு வணங்கியதால் இவனுக்கு உதவிட முன் வந்தார்

அவன் என்ன செய்ய என்று கரையில் சிறிது தூரம் புலம்பியவாறு நடந்தான்

அப்போது அவன் கண்ணில் நீச்சல் தெரியாதவர்கள் அணியும் உடை ஒன்று கிடந்தது தெரிந்தது

அதை சந்தோசத்துடன் எடுத்துப் போட்டவனுக்கு மீண்டும் பயம் வந்துவிட்டது,இது நம்மை அக்கரையில் கொண்டு சேர்க்குமோ? ,சேர்க்காதோ? என்று,
மேலும் சிறது தூரம் அந்த உடையை மாட்டிக்கொண்டு நடந்தான்

அப்போது ஒரு ஆள் அமர்ந்து பயணிக்க கூடிய அளவு உள்ள மரக்கலம் ஒன்று கிடைத்தது

உடனே அதில் ஏறிக்கரையை கடக்கலாம் இந்த உடையை அணிந்து கொண்டு என்று நினைத்தவன்,வேகமாக அதன் அருகில் சென்றான்,

மீண்டும் அவனுக்கு பயம் வந்துவிட்டது,இது அக்கரையைச் சேர்க்குமா? என்று

இன்னும் கொஞ்சதூரம் சென்றதும் ,துடுப்புடன் படகு ஒன்று தென்பட்டது

மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கே சென்றவன் ,

படகில் ஏறி அமரப்போகும் வேளையில்,நாம் சரியாக துடுப்பு போடாவிட்டால்,அக்கரையை அடைய முடியாது ,என்ன செய்வது என்று வழக்கம் போல் பயந்தான்,

மேலும் சிறிது தூரம் செல்ல ,என்ன அதிசயம் அங்கே இவனுக்காகவே *ஒருவர்* படகுடன் காத்திருப்பதைக் கண்டான்

சந்தோசத்தில் துள்ளிக்குதித்து ,கடவுளுக்கு நன்றி சொல்லி அவரிடம் சென்றான்

மீண்டும் பழையபடி அவனுடைய அறிவுச்சிந்தனை தலைதூக்கியது

இவர் ஒழுங்காக படகு ஒட்டுவாரா? என்று

அதை தயக்கமின்றி அவரிடமே கேட்டான்

அதற்கு அவர் *நான்* தினசரி எத்தனையோ பேரை கரை சேர்க்கிறேன்

அதனால் பயப்படாமல் வாருங்கள் என்றார்

சரி என்று அவன் நினைத்து ஏறப்போகும் நிலையில்

அவனது குரங்கு மனம் போகும் போது படகு ஓட்டையாகி தண்ணீர் உள்ளே வந்துவிட்டால் ,அவருக்கு நீச்சல் தெரியும் ,தனக்கு தெரியாதே என்று அவன் நினைத்தான்.

இவ்வாறு அவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே

அந்த ஓடக்காரர் அக்கரையில் நின்றிருந்தார்

அதற்குள் கங்கையில் நீரின் அளவு மிக மிக அதிகமாகி இருந்தது

அந்த ஒடக்காரர் வேறு யாருமல்ல ஏக இறைவனே

நாம்சம்சாரக்கடலை கடந்து நம்மைகரை சேர்ப்பதற்காக எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறான்.

இப்பொழுதும் அவனிடம்( இக்கரையில் நிற்பவனிடம்)

அந்த உடை உள்ளது

தேவை நம்பிக்கை மட்டுமே

இது இருந்திருந்தால்,இத்தனை வாய்ப்புகள் வந்தபோதே அக்கரையை
அடைந்து இருக்கலாம்.

கடவுள் மிகப் பெரிய கருணை வள்ளல்

அதனால் அவனிடம் அந்த உடையை விட்டுச் சென்றார்

தன்னை நம்பியவருக்கும்,நம்பாதவருக்கும் உதவும் வள்ளல் அவன்

நம்பாதவருக்கே உதவும் போது,நம்பியவருக்கு?

அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள்

ஆச்சரியமூட்டும் அற்புதங்களை உங்கள் வாழக்கைப் பயணத்தில்!!!

இதையும் கதை போல் யாராவது சொல்வார்களா? என்று இருக்காமல்

அவன் மேல் நம்பிக்கே கொள்ளுங்கள்

*அவன்* *அனைவருக்கும்* *பொதுவானவனே*

*யாவரும்* *பெற* *உறும்* *ஈசன்* *_காண்க_* !!

*அவன்* ( *ள்* ) *அருளாளே* *அவன்* ( *ள்* ) *தாள்* *வணங்கி*

விபாசனா என்னும் மனதை சுத்தப்படுத்தும் தியானமுறை!

விபாசனா என்னும் மனதை சுத்தப்படுத்தும் தியானமுறை!

விபாசனா என்றால் ஒரு விதமான தியானமுறையாகும். இது மற்ற தியானங்களைப் போல சாதாரண தியானம் கிடையாது.

மற்ற தியானங்கள் எல்லாம் அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் என பயிற்சி இருக்கும். ஆனால் விபாசனா என்பது குறைந்தபட்சம் பத்துநாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டிய முறையாகும்.
பயிற்சி என்றால் கை, கால்களை மடக்குவது, மூச்சை தம்கட்டி இழுத்து வெளியேற்றுவது கண்களை மூடி கவனித்து பார்ப்பது போன்ற எந்த ஒரு வேலையும் கிடையாது.

பத்துநாட்கள் கண்களை மூடி சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பெயர்தான் விபாசனா தியானம்.
ஒஷோ அவர்கள் விபாசனா தியானம் செய்யாதவர்களை தியானம் செய்தேன் என்று கூறினால் ஒப்புக் கொள்ளவே மாட்டார்.

யார் யார் விபாசனா தியானத்தை முடித்திருக்கிறார்களோ அவர்கள் தான் தியானம் செய்தேன் என்று கூற முடியும்.

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கும் பொழுது அதை சுத்தம் செய்வதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தாலும் அதைச் சுத்தம் செய்வது கடினம். ஆனால் அதை ஒன்றுமே செய்யாமல் ஆடாமல் அசையாமல் அந்தக் கண்ணாடி பாத்திரத்தை ஒரு மேஜை மீது வைத்துவிட்டால் சில மணி நேரத்திற்கு அந்த கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள குப்பைகள் அழுக்குகள் கீழே படிந்துவிடும். மேலே உள்ள தண்ணீர் தூய்மையானதாக இருக்கும்.

அதே போல நமது மனதில் உள்ள டென்சன், கோபம், பயம், கவலை போன்ற அனைத்து விசயங்களும் குப்பைகளைப் போன்றது. நாம் மனதில் உள்ள குப்பைகளை நீக்குவதற்காகக் குச்சியைச் விட்டுக் கிளறும்பொழுது அது மீண்டும் மீண்டும் மேலே வருகிறது. பலவிதமான வித்தியாசமான, எத்தனையோ பயிற்சிகளைச் செய்யும் பொழுதும் அது மீண்டும் மீண்டும் மேலே வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் பொழுது அனைத்தும் அழிந்துவிடுகிறது. அதன் பிறகு அது நம்மை தொந்தரவு செய்வதே கிடையாது.

இவ்வாறு நம் மனதில் உள்ள டென்சன், பயம், கவலை, விரோதம், காழ்ப்புணர்ச்சி போன்ற கெட்ட எண்ணங்களை வேறொடு அழிப்பதற்கான பயிற்சி முறைதான் விபாசனா தியானம்.

இந்த விபாசனா தியானத்தைப்பற்றி ஏற்கனவே புத்தகத்திலும் ஆடியோ, வீடியோ. டிவிடிகளிலும், இணையதளம், யூ டியூப் (https://www.youtube.com/watch?v=T3LduBSyyWw) போன்ற ஊடகங்களிலும் நாம் தெளிவாக விளக்கமாகக் கூறியிருக்கிறோம். எனவே இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து விபாசனா குறித்து நான் பேசியவற்றைப் படித்துவிட்டு அல்லது டிவிடிகளில் பார்த்தோ, கேட்டுக் கொண்டோ உடனடியாக விபாசனா பயிற்சிக்குச் சென்றுவாருங்கள்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த விபாசனா தியான மையங்கள் உள்ளன. இதனை உலகுக்கு அளித்தவர், பர்மாவைச் சேர்ந்த கோயங்கா ஜீ என்பவர் இவர் சமீபத்தில் இயற்கை எய்தினார்.
விபாசனா தியானமாக பத்துநாள் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. பத்துநாட்களும் தங்குமிடம் மூன்று வேளை உணவு ஆகியன இலவசமாகவே உலகம் முழுவதும் உள்ள தியான மையங்களில் அளிப்பதற்கு கோயங்கா ஜீ அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வகுப்புகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறேன். என்னுடைய வகுப்புகளில் எல்லாம் தவறாமல் இந்த விபாசனா தியானம் கற்றுக் கொள்ளச் செல்லுங்கள் என்று மக்களிடம் வலியுறுத்திக் கூறிவருகிறேன். கட்டணங்களில்லாத இந்தப் பயிற்சியை அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும் என வழிகாட்டி வருகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விபாசனா மையங்களுக்கு என்னால் ஆயிரக்கணக்கானோர் சென்று பயனடைந்துள்ளனர். போகும்பொழுது நிம்மதியின்றி, அமைதியின்றி, சந்தோ­மின்றி, தூக்கமின்றி, கவலையுடன் சென்றவர்கள் நிம்மதியாக, அமைதியாக, சந்தோ­மாக ஆரோக்கியமாக நம்பிக்கையுடனும் மிகத் தெளிவுடனும் திரும்பி வருவார்கள்.

இந்த விபாசனாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.dhamma.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள் .

இந்த விபாசனா தியானத்திற்கு விளம்பரமாக இதுவரை நோட்டீஸ், விசிட்டிங்கார்டு போன்ற எதையும் யாரும் அச்சடித்து விநியோகம் செய்ததில்லை. டிவி, பேப்பர் போன்ற எதிலும் விளம்பரம் செய்ததும் இல்லை.கோயங்கா ஜீ அவர்கள் நோக்கம் என்னவென்றால் யார் ஒருவருக்குப் பிராப்தம் இருக்கின்றதோ அவர் கண்டிப்பாக விபாசனா தியானத்திற்கு தேடிவருவார் என்று கூறுவார்கள். ஆனால் என்னால் அவரைப்போல் சும்மா இருக்க முடியவில்லை. ஏனென்றால் நான் விபாசனா தியானத்திற்கு சென்றதால் மிகப்பெரிய பலனை அடைந்தேன். நிம்மதியில்லாமல் இருந்த நான் இந்தப் பயிற்சியை செய்த உடன் நிம்மதியான ஒரு மனிதனாக மாறிவிட்டேன்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என உலக மக்களுக்கு இந்த விபாசனா தியானத்திற்கு செல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்து கூறிவருகிறேன். இப்பொழுது பல விபாசனா மையங்களில் இருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்கள். உலகில் உள்ள பல விபாசனா தியான மையங்களில் இருந்தும் அதன் நிர்வாகத்தினர் நீங்கள் யார்? உங்களின் பெயரைக் கூறி பலபேர் இங்கு வந்து செல்கிறார்கள். நீங்கள் ஏன் இதற்கு எல்லோரிடமும் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். நானும் இதனால் மிகுந்த பலனடைந்துள்ளேன். அதனால் மக்களை அனுப்பிவைக்கிறேன் என்று கூறுகிறேன். அனைத்து விபாசனா தியான மைய நிர்வாகிகளும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

"நீங்கள் சொன்னதால் இந்த தியானத்திற்கு வந்துள்ளேன்'. என்று கூறுபவர்களே இங்கு வருபவர்களில் 40 முதல் 50 சதவிகித்தினர் என்று என்னிடம் அவர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான விசயத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அது என்னவென்றால் ஹீலர் பாஸ்கர் ஆகிய நான் அனுப்பி வைத்த அன்பர்கள் பத்து நாட்கள் தியானப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு பைசா கூட கொடுக்காமல் அதாவது நன்கொடை எதுவும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள் என்று வேடிக்கையாக கூறுகின்றனர்.

அதாவது நான் பொதுமக்களை அந்தப் பயிற்சிக்கு செல்லுங்கள் என்று வலியுறுத்தும் பொழுது அங்கு கட்டணம் எதுவும் கிடையாது. எனவே செல்லுங்கள் என்று ஒரு அக்கரையுடன் கூறுகிறேன். ஆனால் பொதுமக்கள் பலரும் செல்லும் பொழுது பணம் எடுத்துச் செல்வதில்லையாம். எனவே யோசித்துப்பாருங்கள். ஏற்கனவே விபாசனா சென்று வந்தவர்கள் இனிமேல் புதியதாகச் செல்லப் போகிறவர்கள் ஆகியோர் இதைப் புரிந்து கொள்வீர்களாக!

நீங்கள் பத்து நாட்கள் பயிற்சி முடிவில் ஏதேனும் மாற்றத்தை உணர்வீர்கள். அப்படியானால் அவர்களின் பயிற்சிக்கும் உபசரிப்பிற்கும் நாம் பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் அல்லவா? ஒரு வேளை பயிற்சியின் முடிவில் உங்களுக்கு எவ்வித மாற்றமும் தோன்றாமலிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பத்துநாட்கள் ஆசிரமத்தில் நமக்கு தங்குவதற்கும் உணவும் வசதியும் செய்துக் கொடுத்ததற்கு பலனாக நாம் அவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஓசியில் விபாசனா பயிற்சிகள் நடத்தினாலும் நாம் ஓசியாகச் சென்று வருவதைவிட குறைந்தபட்ச நன்கொடையாவது அளிக்கவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன்.
வருடத்திற்கு ஒருமுறையாவது அனைவரும் கண்டிப்பாக விபாசனா பயிற்சிக்குச் செல்லவேண்டும்.

ஒரு வருடம் முழுவதும் நடந்த பல விசயங்களில் நமக்கு ஏற்பட்ட டென்சன், கோபம், பயம் ஆகியவற்றை பத்துநாட்கள் பயிற்சியின் மூலம் நீக்கிவிட்டால் நாம் நிம்மதியாக, சந்தோ­மாக, அமைதியாக வாழமுடியும்.

எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வருடத்திற்கு ஒருமுறை (பத்துநாட்கள்) விபாசனா தியானப் பயிற்சிக்குச் செல்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.
1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.
தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.

இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

விபாசனா தியான முறை
****************************

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8 ) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...