Tuesday 4 September 2018

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.
முல்லை இலை – அறம் வளரும்
கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்
வில்வம் இலை – இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்
இலந்தை இலை – கல்வியில் மேன்மை அடையலாம்
ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப் பெறும்.
வன்னி இலை – பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்
நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.
கண்டங்கத்திரி – வீரமும், தைரியமும் கிடைக்கும்
அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்
எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
மருதம் இலை – மகப்பேறு கிடைக்கும்
விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு கைவரப் பெறும்
மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்
தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்
மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப் பெறும்
அரசம் இலை – உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்
ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்
தாழம் இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.
அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்...
*நம்முடம் வாழ்வோரைப்புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..!!*
*தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே...*
*அவர்கள் செய்த தவறுகளை நியாயம் படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்…*

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...