மண்ணானாலும் திருச்செந்தூரில்
மண் ஆவேன்!
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை
மரம் ஆவேன்!
கருங் கல்லானாலும் தணிகை மலையில்
கல் ஆவேன்!
பசும் புல்லானாலும் முருகன் அருளால்
பூ ஆவேன்!
மண் ஆவேன்!
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை
மரம் ஆவேன்!
கருங் கல்லானாலும் தணிகை மலையில்
கல் ஆவேன்!
பசும் புல்லானாலும் முருகன் அருளால்
பூ ஆவேன்!
பொன்னானாலும் வடிவேல் செய்யும்
பொன் ஆவேன்!
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை
பூ ஆவேன்!
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன்!
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்!
பொன் ஆவேன்!
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை
பூ ஆவேன்!
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன்!
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்!
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்!
பழச் சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்!
அருள் உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன்!
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்!
பழச் சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்!
அருள் உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன்!
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்!
மண்ணானாலும் திருச்செந்தூரில்
மண் ஆவேன்!
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை
மரம் ஆவேன்!
கருங் கல்லானாலும் தணிகை மலையில்
கல் ஆவேன்!
பசும் புல்லானாலும் முருகன் அருளால்
பூ ஆவேன்!
மண் ஆவேன்!
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை
மரம் ஆவேன்!
கருங் கல்லானாலும் தணிகை மலையில்
கல் ஆவேன்!
பசும் புல்லானாலும் முருகன் அருளால்
பூ ஆவேன்!
No comments:
Post a Comment