Thursday 3 January 2019

ஆறுவகைச் சுவை

ஆறுவகைச் சுவை
********************
1⃣ *காரம்
************
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும்.
உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
வெங்காயம்,
மிளகாய்,
இஞ்சி,
பூண்டு,
மிளகு,
கடுகு
ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது.
2⃣ *கசப்பு
************
உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும்.சளியைக் கட்டுப்படுத்தும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
பாகற்காய்,
சுண்டக்காய்,
கத்தரிக்காய்,
வெந்தயம்,
பூண்டு,
எள்,
வேப்பம்பூ,
ஓமம்
போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.
3⃣ *இனிப்பு
**************
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
பழவகைகள்,
உருளை,
காரட்
போன்ற கிழங்கு வகைகள்.
அரிசி,
கோதுமை
போன்ற தானியங்கள்.
மற்றும்
கரும்பு
போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
4⃣ *புளிப்பு
*************
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
எலுமிச்சை,
புளிச்ச கீரை,
இட்லி,
தோசை,
அரிசி,
தக்காளி,
புளி,
மாங்காய்,
தயிர்,
மோர்,
நார்த்தங்காய்
போன்றவற்றில் அதிகம் உள்ளது.
5⃣ *துவர்ப்பு
***************
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது.
இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
வாழைக்காய்,
மாதுளை,
மாவடு,
மஞ்சள்,
அவரை,
அத்திக்காய்
போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
6⃣ *உப்பு
***********
ஞாபகசக்தியை கூட்டும்.
கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
*கிடைக்கும் உணவுப் பொருட்கள்
..........................................................
கீரைத்தண்டு,
வாழைத்தண்டு,
முள்ளங்கி,
பூசணிக்காய்,
சுரைக்காய்,
பீர்க்கங்காய்
போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...