Friday 14 December 2018

தில்லை ஆதிரை ஆருத்ர தரிசனப்பெருவிழா!!

தில்லை ஆதிரை ஆருத்ர தரிசனப்பெருவிழா!!
14-12 = மஞ்சம்
15-12 = சந்திர பிரபை
16-12 = சூரிய பிரபை
17-12 = பூத வாகனம்
18-12 = காளை வாகனம் (தெருவடைச்சான்)
19-12 = யானை வாகனம்
20-12 = ராவணகர்வபங்க கயிலாய வாகனம்
21-12 = பிட்சாடனர் கோலம்
22-12 = நடராச மூர்த்தி,சிவகாமி அம்பிகை தேரேற்றம், தேர்வீதியுலா, பின்மாலை ராச சபை ஏற்றம், இரவு லட்சார்ச்சனை,
23-12 = காலை ஆதிரை அபிசேகம், ஆருத்ரா அலங்கார காட்சி, பின் நடராச மூர்த்தி, சிவகாமி அம்பிகை அம்பலம் ஏறுதல்
24-12 = முத்து பல்லக்கு
வாரீர்! கோயில் திருவிழா
இன்று முதல் ஆரம்பம்!!
#சிதம்பரம்
(தில்லை) அன்னை #சிவகாமி உடனமர் அருள்மிகு #நடராசப் பெருமான் திருக்கோயில் #மார்கழி #திருவாதிரை விழா இன்று 14.12.18 காலை வெகு விமரிசையாக #கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Chidambaram Sri Natarajar Temple Margazhi Thiruvadhirai festival started with flag hoisting today 14.12.18 morning.
--------------------------------
தேன்புக்க தண்பணை சூழ்
தில்லைச் சிற்றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்
கூட்டாங்காண் சாழலோ- திருச்சாழல்
பொருள்-
தில்லைச் சிற்றம்பலத்தான் நடனம் செய்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, இறைவன் நடனம் செய்யாது ஒழிந்தால், உலகம் முழுதும் காளிக்கு உணவாய் விடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.
--------------------------------
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...