Saturday 13 October 2018

கனவுகளின் பலன்கள்

கனவுகளின் பலன்கள் :

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

​இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

​நற்பலன் தரும் கனவுகள் :

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.

மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.

வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

*******************************************

​தீய பலன் தரும் கனவுகள் :

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

குழந்தையைக் கனவில் காண்பதுநல்லது. தொழில்விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்விளையாடுவதுபோலவோ, சிரித்துமகிழ்வது போலவோ கனவுகண்டால்சந்தோஷமும் மகிழ்ச்சியும்நிலைக்கும்.

சூரியனைக் கண்டால் வியாதிகள்நீங்கும். விரோதிகளைவெல்லும்ஆற்றல் கிட்டும்.

கோயிலைக் கண்டால் நூதனமானதொழில்விருத்தியாகும். செல்வம்குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவுகண்டால் வறுமைநீங்கும்.பலருடன்சேர்ந்து சாப்பிடுவதாக கனவுகண்டால்பொருள் லாபம் உண்டாகும்.

பழங்களை ஒருவர் தனக்குகொடுப்பதாகவோ, உண்பதாகவோகனவு கண்டால் செய்யும்காரியம்வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பதுநன்மையானது. கஷ்டமான நிலைவிலகும். வம்புவழக்கு இருப்பின்வெற்றிகிட்டும்; நோயுற்றிருப்பின்நோய் அகலும்.

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக்கண்டால்திருமணமாகாதவருக்குதிருமணமும்திருமணமாகியிருந்தால்புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக்கூட்டைத் தானே பிரிப்பதாய்கண்டால்துயரமிகுந்த சம்பவம் நடக்கஇருக்கிறது என்பதைஅறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்குஇரையூட்டுவது போலவும்தன்குடும்பத்துடன் இருப்பதையும்கண்டால்வாழ்க்கையில் சந்தோஷம்ஏற்படும்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக்காண்பதும் நல்லதே. ஆனால்குருவிகள் சண்டை போடுவதைப் போலகண்டால்குடும்பத்தில் பிளவுகள்ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும்பகைஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக்கண்டால்கூட கெடுபலன். பலதொல்லைகள் உண்டாகும். அடுப்புசுவாலையுடன்எரிந்துகொண்டிருப்பதாகக் கண்டால்தொழிலில் விருத்திஏற்படும். புதிதாகதொழில் தொடங்கி இலாபம்பெறநேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோஅதன் குட்டிகளோஇருப்பதாகக் காணநேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்¢டமும் உண்டாகும். எரியும் அடுப்புஅணைத்து அதன்கரியையோ சாம்பலையோகாணநேரின்எதிர்பாராத நஷ்டம்ஏற்பட்டு அதனால் துன்புறப்போவதைஉணர்த்தும். அழுக்கு ஆடைஅணிந்திருப்பதாகக்கண்டால் பலவிதசங்கடங்கள் நேர இருக்கின்றனஎனஅறியலாம்.

வெண்பட்டு ஆடைஉடுத்தியிருப்பதாகக் காணநேரின்பெண்களின் சேர்க்கையும்அதனால், இலாபமும் நேரும்தன்னையாரோ ஏமாற்றிவிட்டதாகக்கண்டால்வஞ்சகத்தால் தன்னிடமுள்ளபொருள் பறிபோகப்போகிறதுஎன்பதை அறியலாம்.

ஒரு நூதமான இயந்திரத்தைக்கண்டால், தான்மேற்கொள்ளப் போகும்செயலால் வெற்றியும்இலாபமும்ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானேஇயக்குவதாய்க் காணநேரின், செய்யப்போகும் தொழிலில்நிச்சயம்அபிவிருத்தியும் இலாபமும்மிகும். அந்த இயந்திரம்இயங்கிக்கொண்டிருப்பதாகக் கண்டால்தான்நினைக்கும் காரியத்தைச்செய்வதால் நன்மை பெறலாம்.

ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டேஇருந்து நின்றுபோவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூடபாழ்படப்போகிறது என்பதைஅறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக்கண்டால்செய்தொழிலில் விருத்திஉண்டாகும்.

நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறுநஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீதுவீண்பழி சுமத்துவர். எலுமிச்சமரத்தைக்காண்பது நல்லது. அதில்பழங்கள் மிகுந்துதொங்குவதாகக்காணப்பட்டால் உடனடியாகஎதிர்பாராதபணவரவு ஏற்படும்.

அதுவே பழமாக இல்லாது காயாகஇருப்பின் பண வரவுஏற்படும். ஆனால்மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய்விட்டதாகக் கண்டால் பலவிதகஷ்டநஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்தநீரைக்காணின்வாழ்க்கையில் கஷ்டங்கள்நீங்கப்போவதையும், நல்ல காலம்தொடங்குகிறதுஎன்பதையும்அறியலாம் பேனா அல்லதுஎழுதுகோல் எதையேனும்கண்டால்கடிதம் மூலமாக பொருள் வரவுஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள்விருத்தியாகும்.

அரண்மனைக்குள் தாமே செவதாய்க்கான நேரின், உற்றார் உறவினர்களால்சந்தோஷம் மிகுதியாகும். செல்வநிலையும் உயரும்.

வயதில் மூத்தவர்கள் தன்னைஆசீர்வாதம் செய்வதுபோன்று கனவுகண்டால் ஜீவன மேன்மையும்பொருள்சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர்கொடுப்பதாகக்கண்டால் தொழிலில் விருத்தி, சகலபாக்கியங்களும் பெருகும்.

அப்பழத்தைச் சாப்பிடுவதாகக்கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில்ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப்போவதைக்குறிக்கும். காய்ச்சல், நோய்ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில்கலகம் ஏற்பட்டுஅதனால் கஷ்டம்நேரும்.

தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக்கண்டால் கூடகுடும்பத்தில் ஏற்படப்போகும் கலகத்தின் அறிகுறியேஆகும்.

சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக்கண்டால்குடும்பத்தில் பற்றுஅதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.

சாவிக் கொத்து காணாமல்போனதாகக் கண்டால் பலவிதகஷ்டநஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம்போவார்.

ஒரு கதவையோ பூட்டையோதிறப்பதாகக் கண்டால்பிறருக்குஉதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர்உண்மை: நமது ஆழ்மனதில்புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்தியநிகழ்வுகள்தான்தூக்கத்தில்கனவுகளாக வருகின்றன. இதற்குபலன்களாக நாம்எடுத்துக்கொள்பவை, நம்மால்ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள்தொடர்பான பலன்களும்! நல்ல பலன்ஏற்படும் என்று நம்பினால் நல்லபலனைஅடையலாம் அல்லது அதைநெருங்கலாம். அதேபோன்றுதான்தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்படவேண்டாம். பாலூட்டிஇன மிருகமேஇன்றைய மனித இனத்தின்முந்தையநிலை. லட்சக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பு, உலகம்முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்றஊர்வனவற்றிற்கும்பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின்நினைவுகள் மனிதஇனத்தின்மரபணுக்களில் அழுத்தமாகபதிந்துபோனதுதான் மேற்படி கனவுக்குகாரணம். கனவு பற்றியமேலும் சிலஉண்மைத் தகவல்கள்: பார்வைஇல்லாதவர்களுக்கு வரும்கனவுகளில்உருவங்கள்இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சிஅடைந்தவர்கள் மட்டுமின்றிகைக் குழந்தைகளும்கனவுகாண்கின்றன. ஏன்… தாயில்வயிற்றில் வளரும்குழந்தைக்கு கூடகனவு வருகிறது. மனிதர்களைபோன்றுமிருகங்களும் கனவு காண்கின்றனஅடையநினைக்கும் உயர்நிலையை நம்எண்ணங்களைவாக்கியங்களாய்அமைத்து நம் பார்வையில்படும்படிவைப்பது நல்ல பலனைத்தரும். ஏனெனில் எதுகண்களில்படுகின்றதோ அது மனதில்ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோஅதுவாகவே நாம்ஆகிறோம். வெற்றியின் முதல் கட்டம் நம்மைநாமேவெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கானகாரணிஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்தகாட்சியும்கண்முன்னே தெரியும்வாசகங்களும் நிஜம் பெறசரியானதிட்டம் தேவை.

​இறந்தவர்களைக் கனவில்கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள்கனவில் வந்தால் நல்லபலன்கள்கிடைக்கும் என்றுகனவுகள் தொடர்பானநூல்களில்கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்திஎடுத்து நன்றாகவாழ்ந்து மரணமடைந்தமுன்னோர்கள்கனவில் வந்தால்அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள்கனவில் வந்தால் சிலஇடர்பாடுகள்ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில்வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவைஏற்படக்கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத்தவிர்க்க குலதெய்வக்கோயில்வழிபாட்டைமேற்கொள்ளலாம். பொங்கல்வைத்துஅன்னதானம் வழங்கலாம். வஸ்திரதானம்செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கைமுழுவதும்சிறப்பாக வாழ்ந்துஇயற்கைஎய்தியவர்கள் கனவில்வந்தால் கவலைகொள்ளத்தேவையில்லை.

​நீர் நிலை கனவுகள் :

நீர் நிலைகளை கனவில் பார்த்தால்நல்ல சகுனமாககருதப்படுகிறது. ஆறுபெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில்தண்ணீர் கொட்டுவது, கடல்பொங்கிவருவது, குளம் நிரம்பிவழிவது போலகனவு கண்டாலும்அடுத்தடுத்து நல்லசெயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவுகண்டால் சுபபலன்கள் ஏற்படும். வாழ்க்கையின்அடுத்த நிலைக்குசெல்லப்போகிறார்என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...